SBS பேருந்துகள், கார் இடையே விபத்து: பேருந்து பயணிகள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Accident singapore sbs
SINGAPORE_INCIDENTS/INSTAGRAM

மரைன் பரேட் சாலையில் இரண்டு SBS ட்ரான்சிட் பேருந்துகள், கார் மற்றும் பாதசாரி சம்மந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தில் பயணித்தவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அதில் மூன்று வயது குழந்தையும் அடங்கும்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியர் விபத்தில் மரணம்: விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

இந்த விபத்து கடந்த சனிக்கிழமை அன்று பிற்பகல் நேரத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று முதல் 73 வயதுக்கு உட்பட்ட ஆறு பயணிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய 72 வயதான பாதசாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

நான்கு பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும், இருவர் சாங்கி பொது மருத்துவமனைக்கும், ஒருவர் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

விடுமுறை நாளில் கடலில் குளித்து மகிழ்ச்சியாக இருக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி மரணம்