SCDF ஆம்புலன்ஸ், 2 கார்கள் விபத்து: 11 மாதக் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

SCDF

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து 11 மாதக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) ஆம்புலன்ஸ் மற்றும் இரண்டு கார்கள் இந்த விபத்தில் சம்மந்தப்பட்டன.

ஜூரோங் ஈஸ்ட்டில் மரணத்தை ஏற்படுத்திய தீ விபத்து: அதே வீட்டில் மீண்டும் தீ – சோகத்துக்கு மேல் சோகம்

இந்த விபத்து கெய்லாங் மற்றும் தஞ்சோங் கட்டோங் சாலை சந்திப்பில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று மாலை 6.45 மணியளவில் நடந்தது.

அதில் ஒரு காரில் இருந்த குழந்தைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், பின்னர் மற்றொரு SCDF ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

குழந்தை சுயநினைவுடனும் மற்றும் சீரான நிலையில் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மீண்டும் தீபாவளி ஒளியூட்டு: மின்னொளியில் ஜொலிக்க உள்ள லிட்டில் இந்தியா…!