சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கத்தை சிங்கப்பூருக்கு கடத்தி முயன்ற நபரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து
சென்னையில் இருந்து புறப்படும் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது, மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் கொண்டு வந்த துணிப்பையின் அடியில் கட்டுக்கட்டாக 20 லட்சம் ரூபாய் வெளிநாட்டு ரொக்கத்தைக் கடத்த முயன்றது தெரிய வந்தது.
வெளிநாட்டு ரொக்கத்தைப் பறிமுதல் செய்து, அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.