சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அவர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் புதுடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு செல்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) முதல் புதன்கிழமை (ஜன. 8) வரை புது டெல்லி மற்றும் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார், என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை (ஜன. 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் கன்டோன்மென்ட் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி..!
இந்த பயணத்தின் போது இந்திய தலைநகர் புதுடில்லியில், திரு.தர்மன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அரசாங்கத் தலைவர்களையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் செவ்வாய்க்கிழமை மும்பையில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்புரை ஆற்றுவார் என்றும், மகாராஷ்டிரா முதல்வரையும் தொழில்துறைத் தலைவர்களையும் பயணத்தின் போது தர்மன் அவர்கள் சந்திப்பார், என்றும் கூறப்பட்டுள்ளது.