சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்று பதிவானதை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதி செய்துள்ளது.
அவர் 41 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஆவார். அவருடன் சேர்ந்து உள்ளூர் அளவில் 3 பேருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஊழியர் மரணம்; தொடர் மரணம்… அச்சத்தில் உறையும் வெளிநாட்டு ஊழியர்கள்
கடந்த ஜூலை 9ஆம் தேதி அன்று அவரின் உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக MOH தெரிவித்துள்ளது.
தற்போது அவர் தொற்று நோய் தடுப்பு தேசிய நிலையத்தில் (NCID) சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.
தொடர்புகள் தடமறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் MOH விளக்கியுள்ளது.
பயங்கரவாத மிரட்டல் அதிகம்… அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்