சிங்கப்பூரில் தீவு முழுவதும் இன்று (ஆக. 30) காலை இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
நள்ளிரவு முதல் காலை 11 மணி வரை வெளுத்து வாங்கிய மழையில், தோ பாயோவில் மட்டும் மொத்தம் 100மிமீ மழை பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் வெளுத்து வாங்கிய கனமழை – பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இன்று முன்னதாக, ஹௌகாங் அவென்யூ 8 மற்றும் பொங்கோல் வழி ஸ்லிப் சாலையில் திடீர் வெள்ளம் பதிவாகியுள்ளதாக PUB தெரிவித்தது.
பின்னர் வெள்ளம் குறைந்துவிட்டதாகவும் PUB தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான வானிலை சிங்கப்பூர் முழுவதும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 10:42 மணி நிலவரப்படி, தீவு முழுவதும் 23°C முதல் 24°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.
மேலும், காலை 8:17 மணி நிலவரப்படி, பாசிர் பஞ்சாங்கில் மணிக்கு 31.5 கிமீ வேகத்தில் காற்று பதிவாகியுள்ளது.
அதேபோல, காலை 6:17 மணிக்கு பாசிர் பஞ்சாங்கில் குறைந்தபட்சம் 21.8°C காற்றும் பதிவாகியுள்ளது.
“அனைத்து குறைந்த ஊதிய ஊழியர்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்”