தினசரி விமானங்களை இயக்க உள்ள SIA – ஆனால் இவர்கள் மட்டும் தான் செல்ல முடியும்!

(Photo: SIA)

சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் இடையே அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் மார்ச் 16 வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தினசரி விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சேவை, குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் பொறுப்புக்குரிய நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கானது என்றும் SIA கூறியுள்ளது.

ஜன. 1 முதல் சிங்கப்பூரில் இருந்து செல்ல முடியாது – தடை விதித்த நாடு

மேலும், சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு ஒலிம்பிக் பொறுப்புக்குரிய நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காகவும் இது இயக்கப்படுவதாக CNAவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக SIA ​​கூறியது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வருடாந்திர உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது, விளையாட்டுகளுக்கு ஆதரவாக SIA சிறப்பு விமானங்களை இயக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறினார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4 தேதி அன்று தொடங்க உள்ளன.

சிங்கப்பூர் அதிகாரிகளின் அதிரடி சோதனை: 56 வணிக நிறுவனங்கள், 177 நபர்கள் பிடிப்பட்டன