சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் NEWBrew நிறுவனத்தின் மதுபானம் பீர் போன்று செம்ம ருசியில் இருப்பதாக கூறுகின்றனர் அதன் ரசிகர்கள்.
இது மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆகையால் இது சாதாரண பீர் அல்ல, என்கின்றனர் குடிமகன்கள்.
இது நாட்டின் தேசிய நீர் அமைப்பான PUB மற்றும் உள்ளூர் மதுபானம் தயாரிக்கும் நிறுவனமான Brewerkz ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பில் உருவானதாகும்.
இது 2018 ஆம் ஆண்டு நடந்த நீர் மாநாட்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து சூப்பர் மார்க்கெட்களிலும் Brewerkz விற்பனை நிலையங்களிலும் NEWBrew விற்பனைக்கு வந்தது.
கழிவுநீரா? என்ற முகசுளிப்பு ஒருபக்கம் இருந்தாலும், இதன் ரசிகர்கள் அதை வேற லெவல் ருசி என கூறி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தந்தை… மகள் மர்மமான முறையில் மரணம் – கணவர் போலீசில் புகார்
இது பற்று மேலும் படிக்க:
சிங்கப்பூரில் சிறுநீரில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறதா? அதற்கான காரணம் என்ன? வெளிவராத உண்மைகள்!