சிங்கப்பூரில் புதிதாக 1,090 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Pic: File/Today

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (26/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (26/11/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 1,090 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,086 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 1,064 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 22 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 4 பேருக்கும் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,59,875 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

‘மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

கொரோனாவால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 69 முதல் 83 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 684 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 214 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 85 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மோசமான கிருமி மாறுபாடு பாதிப்பு சிங்கப்பூரில் இல்லை – சுகாதார அமைச்சர்

கடந்த நாளில் 2,233 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 301 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.