சிங்கப்பூரில் மேலும் 1,670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (21/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (21/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,657 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 1,577 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 80 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 13 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,188 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான பயணம்: சென்னை உள்ளிட்ட 3 நகரங்களிலிருந்து ஆறு தினசரி விமானங்களுடன் தொடங்கும்!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 63 முதல் 95 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,362 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 186 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 104 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல VTL பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் எப்போது?

கடந்த நாளில் 2,640 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 448 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.