சிங்கப்பூரில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

TODAY

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (23/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், சிங்கப்பூரில் நேற்று (23/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,782 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,775 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சமூக அளவில் 1,754 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 21 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,55,431 ஆக அதிகரித்துள்ளது.

‘இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை’- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 62 முதல் 92 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 672 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,389 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 205 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 92 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- அறிவிப்பை வெளியிட்டது ‘FlyScoot’ நிறுவனம்!

கடந்த நாளில் 1,778 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 304 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.