குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு 2 வாரங்களுக்கு தடை – காரணம் என்ன?

(PHOTO: Reuters)

இரண்டு வாரங்களுக்கு ஹாங்காங் செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் சில பயணிகளுக்கு கோவிட்-19 முடிவு பாசிட்டிவ் என வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

புறப்படுவதற்கு முந்தைய சோதனையில் சில SIA வாடிக்கையாளர்களுக்கு கோவிட்-19 நெகடிவ் வந்ததாகவும், ஹாங்காங்கிற்கு சென்றவுடன் பாசிட்டிவ் முடிவு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹாங்காங் to சிங்கப்பூர் SIA விமானங்களுக்கு பாதிப்பில்லை

ஹாங்காங்கிற்கு செல்லும் SQ882 மற்றும் SQ894 ஆகிய இரண்டு தினசரி பயணிகள் விமான சேவைகள் மார்ச் 1 வரை நிறுத்தப்படும்.

ஆனால், ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இருமுறை செல்லும் பயணிகள் விமானம் SQ883 மற்றும் SQ895 ஆகியவை பாதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் SIA மன்னிப்புக் கேட்டுகொண்டுள்ளது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!