இந்தியாவின் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம்.
பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்
இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையேயான வழித்தடத்தில் ஏர்பஸ் A350- 900 விமானம் இயக்கப்படும். இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும். வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர்பஸ் A350- 900 விமானம் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும்.
எனினும், வாரத்தில் வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டும் A350- 900 விமானம் இயக்கப்படும். இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற நாட்களில் இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்கள் இயக்கப்படும்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆஸ்திரேலியாவுக்கு பயணம்!
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ‘A350- 900’ ரக விமானம் அதிநவீன சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது என்பது இந்த விமானத்தின் தனி சிறப்பு.