சிங்கப்பூரில் முன்னோடித் திட்டத்தின் கீழ், மூன்று பார்கள் (bars) மற்றும் பப்கள் (pubs) இரண்டு மாதங்களுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வர்த்தக, தொழில் அமைச்சகம் (MTI) மற்றும் உள்துறை அமைச்சகம் (MHA) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.
சக ஊழியருக்கு கிருமித்தொற்று…தனிமை உத்தரவு மீறி சுற்றித்திரிந்த ஊழியருக்கு சிறை!
மூன்று பார்கள் மற்றும் பப்கள்
- ஆர்ச்சர்ட் பிளாசாவில் (Orchard Plaza) உள்ள Bar Kiharu
- கப்பேஜ் பிளாசாவில் (Cuppage Plaza) உள்ள Bell Bar
- போட் கீயில் (Boat Quay) உள்ள Skinny’s Lounge
இதில் ஆபரேட்டர்களின் தயார்நிலை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்கான திறனை மதிப்பிடுவது உட்பட ஆறு பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த பின்னர் அமைச்சுகள் அதனை தேர்ந்தெடுத்தன.
அங்கு, சாப்பிடும் போதும், குடிக்கும் போதும் தவிர மற்ற எல்லா நேரமும் வாடிக்கையாளர்கள் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.
ஒரு குழுவில் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படும், அதே போல குழுக்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கும், TraceTogether செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தேவையான மாற்றம் – ஆய்வு!