Alphabet நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் சிங்கப்பூர் பின்டெக் (Fintech) விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
நாள்முழுவதும், 5 நாள்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும்பாலும் இணையம்வழி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில் தோன்றிய நீர்ச்சுழற்சி!
சுமார் 1,400க்கும் மேற்பட்டவர்கள் உரையாற்றவுள்ள இந்த விழாவில், Microsoft நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) கலந்துகொள்ள உள்ளார்.
இதில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கலந்துகொண்டு துவக்க உரை நிகழ்த்தியுள்ளார்.
மேலும், இன்று தலைவர்கள் பற்றிய உரை தொடரில் திரு. சுந்தர் பிச்சை பேசுவார் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
COVID-19 அனுபவம், கற்றுக் கொடுத்தது என்ன என்பது பற்றி திரு. பில் கேட்ஸ் பேச உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Arden), சர்வதேச பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவா (Kristalina Georgieva) ஆகியோரும் கலந்துகொள்ளவர்.
சிங்கப்பூரில் பணியாற்றிவந்த தமிழக ஊழியர் மரணம்!