சென்னை-சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள கூடுதல் விமானங்கள்!

Chennai airport

சென்னை – சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள இனி கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று ஏர் இந்தியா (Air India) தெரிவித்துள்ளது.

நாளை (ஜனவரி 1) முதல் மார்ச் 27 வரை சென்னை-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

காயமடைந்த நிலையில் பெண்…கொலை முயற்சி சந்தேகத்தில் ஆடவர் கைது

இந்த விமானம் “டெல்லி – சென்னை -சிங்கப்பூர் – சென்னை – டெல்லி” என்ற வழி தடத்தில் இயங்கும் என்றும் அது கூறியுள்ளது.

விமான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

மேலும், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.

இது பற்றிய கூடுதல் விவரங்களை அதன் இணையப்பக்கத்தில் காணலாம்.

ஜனவரி முதல் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…