“சிங்கப்பூர் – சென்னை” செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் கடும் அவதி

Indians free visa entry
Photo: Chennai Airport

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

வியாழக்கிழமை சென்னையில் சில மணிநேரம் பெய்த கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவருக்கு ஆறு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு

6 சர்வதேச விமான சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் உரிய நேரத்தில் தரையிறங்க முடியவில்லை.

மேலும், சிங்கப்பூர், துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியை சந்தித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை