சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிகிழமை காலை கோவை வந்த விமானத்தில் சுமார் 4.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மலேசிய நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இன்று கோவை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்கேஸ்வரன் மற்றும் நந்தினி என்றும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமானச் சேவையில் சிக்கல்களைக் எதிர்கொள்ளும் சிங்கப்பூர் விமான நிலையம் – பாதிப்பு ஏற்படுமா?