சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
Photo: Singapore in India

 

புத்தாண்டு பண்டிகையையொட்டி,சென்னையில் உள்ள சிங்கப்பூரில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங் (Edgar Pang) தலைமையில் தூதரக அதிகாரிகள், புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.

சிங்கப்பூரில் 88% வரை தள்ளுபடி விற்பனை.. மெத்தை, சோபா உட்பட 1000 பொருட்கள் – சிறப்பு பரிசுகளும் உண்டு

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
Photo: Singapore in India

நேற்று (டிச.31) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக BBQ சிக்கன் போன்ற உணவுகள், தூதரக அதிகாரிகளுக்கு இரவு உணவாகப் பரிமாறப்பட்டது. பின்னர், அனைவரும் கேக் வெட்டி, 2024- ஆம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சிங்கப்பூரில் ஜன.,2 முதல் புதிய திருத்த சட்டம்.. மீறினால் S$10,000 வரை அபராதம்

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் துணைத் தூதருடன் தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் குழுப் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அத்துடன், அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.