புத்தாண்டு பண்டிகையையொட்டி,சென்னையில் உள்ள சிங்கப்பூரில் உள்ள தூதரக அலுவலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங் (Edgar Pang) தலைமையில் தூதரக அதிகாரிகள், புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
நேற்று (டிச.31) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக BBQ சிக்கன் போன்ற உணவுகள், தூதரக அதிகாரிகளுக்கு இரவு உணவாகப் பரிமாறப்பட்டது. பின்னர், அனைவரும் கேக் வெட்டி, 2024- ஆம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சிங்கப்பூரில் ஜன.,2 முதல் புதிய திருத்த சட்டம்.. மீறினால் S$10,000 வரை அபராதம்
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் துணைத் தூதருடன் தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் குழுப் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அத்துடன், அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.