சிங்கப்பூரில் மேலும் 743 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (04/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (04/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 743 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 731 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 707 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 24 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பயணிகளுக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,659 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களுக்கெல்லாம் VTL திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் நுழைவதற்கு அனுமதி இல்லை!

கொரோனவால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 893 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 179 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 58 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 4 பேரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.

லாட்வியா துணை பிரதமர், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சந்திப்பு!

கடந்த நாளில் 1,521 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 226 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.