சிங்கப்பூரில் புதிதாக 799 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

799 new Covid-19 patients in Singapore, taking the total to 14,423
799 new Covid-19 patients in Singapore, taking the total to 14,423

சிங்கப்பூரில் நண்பகல் (ஏப்ரல் 27) நிலவரப்படி, புதிதாக 799 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 14,423ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 14 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.