சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் நெல்லையைச் சேர்ந்த இளம் இயக்குநருக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

Video Crop Image

தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜாக்சன்ராஜ் இயக்கத்தில் உருவான ‘அறமுடைத்த கொம்பு’ என்ற திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான சேவை! – மனிதவள அமைச்சகத்தின் ஆதரவுடன் திறக்கப்பட்டுள்ள மையம்

நெல்லை மாவட்டம், பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜாக்சன்ராஜ் என்ற திரைப்பட இயக்குநர், தனது சொந்த மாவட்டமான நெல்லையைச் சேர்ந்த மக்கள் மற்றும் திரைக்கலைஞர்களைக் கொண்டு ‘அறமுடைத்த கொம்பு’ என்ற பெயரில் திரைப்படத்தை உருவாக்கினார். ஏற்கனவே, பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த திரைப்படம் வாரிக் குவித்து வருகிறது. தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற ‘GOLDEN MERLION AWARDS’ வழங்கும் விழாவில், இந்த திரைப்படத்திற்காக ஜாக்சன்ராஜூக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.