சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விலை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.5 விழுக்காடு கூடியது. இதன் காரணமாக வீடுகளின் வாடகை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை 3.2 விழுக்காடு உயரும் என்ற நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறி இருந்தது. ஆனால் விலை எதிர்பார்த்த அளவை விட உயர்ந்துவிட்டது.
மேலும் முதல் காலாண்டில் தனியார் வீடுகளின் விலை 0.7 விழுக்காடு மட்டுமே உயர்ந்த நிலையில், தற்போதைய உயர்வு மிக அதிகமாகும்.
நகரத்தின் சுற்றுவட்டத்திலும் தனியார் வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.
குறிப்பாக முதல் காலாண்டில் குறைந்திருந்த தரை வீடு தவிர்த்த மற்ற தனியார் வீடுகளின் விலை 3.6 விழுக்காடு அதிகரித்தது.
தரை வீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடு உயர்ந்தது. தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தில் நிலவும் தாமதம், பெரிய வீடுகளை வாங்க விருப்பம் போன்ற காரணங்களால் மறுவிற்பனை வீடுகள் ஏற்றம் கண்டுள்ளது.
விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக குறைந்துள்ளது.