கடந்த நவம்பர் 28 மாலை, ஹௌகாங் அவே 3 (Hougang Ave 3) மற்றும் பார்ட்லி ரோடு ஈஸ்ட் (Bartley Road East) சந்திப்பில் வேன், கார் மற்றும் டிப்பர் டிரக் ஆகிய மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியில், டிப்பர் டிரக் நீல நிற கார் மீது மோதியதைக் காட்டுகிறது.
இன்று முதல் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்!
அதே போல, டிரக்கின் பின்னால் உள்ள வேனின் முகப்பு கண்ணாடிகள் மற்றும் அதன் முன் கதவு நொறுங்கி இருப்பதையும் காணமுடிகிறது.
கடந்த நவம்பர் 28 இரவு 8:19 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.
மூன்று ஓட்டுனர்கள் மற்றும் இரண்டு பயணிகள் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவாக இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
கொரோனா: உள்ளூர் அளவில் இந்திய ஊழியர் பாதிப்பு – அவருடன் வசித்த ஊழியர்களுக்கும் சோதனை