வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் பீச் சாலையில் (Beach Road) கோல்டன் மில் டவர் (Golden Mile Tower) கார்னிவல் சினிமாஸில் (CARNIVAL CINEMAS) ‘வெற்றியின் ரகசியம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முனைவர் வெ.இறையன்பு ‘உடல்மொழி உன்னதம்’ என்ற தலைப்பிலும், முனைவர் வெ.திருப்புகழ் ‘புதியன விரும்பு’ என்ற தலைப்பிலும் உரையாற்றவிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க sg.bookmyshow.com என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று கட்டணத்தைச் செலுத்திப் பதிவுச் செய்துக் கொள்ளலாம். 15, 25, 30, 40 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 15 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தது. விஐபி நுழைவுச்சீட்டுக்கு 8196- 4070 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவரது சகோதரரான முனைவர் வெ.திருப்புகழ் இந்திய பிரதமரின் சிறப்பு தனிச் செயலாளரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலும் திறன்படப் பணியாற்றியுள்ளார்.
இருவரின் உரையையும் கேட்க சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையாகாது.