OneAviation Careers கண்காட்சி இரண்டாவது முறையாக இந்த வாரம் மீண்டும் நடக்க உள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) கூறியுள்ளது.
அதில் 1,700 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்படும் என்றும் CAAS கூறியுள்ளது.
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்
சுமார் 40 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு, வரும் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 5 வரை சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு தொடக்க கண்காட்சியில் 21 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமான நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.
முக்கியமாக, விமான நிலைய பிரிவுகளான விமான நிலையம், விமான நிறுவனம், அரசாங்கம், விமான சரக்கு, விமானக் கல்வி, விண்வெளி, விமான போக்குவரத்து மேலாண்மை மற்றும் ஆளில்லா வானுர்திகள் போன்றவை இடம்பெறுவதாக CAAS தெரிவித்துள்ளது.
ஏர்பஸ், சாங்கி விமான நிலையக் குழு, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஜெட்ஸ்டார், லோட்டே டிராவல் ரீடெய்ல், ரோல்ஸ் ராய்ஸ் சிங்கப்பூர் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவங்கள் 1,700 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்துகின்றன.
இந்த துறையில் வேலை தேடுபவர்கள் நேர்காணலுக்கு முன் பதிவு செய்யலாம் – முன்பதிவு லிங்க்
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்