தமிழக அரசின் சட்டப்படி லாட்டரி விற்பது குற்றம். வெளிநாடுகளில் வாங்கி அதனை கொரியர் மூலம் அனுப்பினாலும் குற்றமே. உலகில் எந்த மூலையில் இருந்தும் லாட்டரியை வாங்க சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஒருமுறையை கையாண்டு வருகின்றனர். குழுவாக ஒருங்கிணைந்து டிக்கெட் வாங்கப்படுகிறது. அதற்கு அவர்களுக்கு டிக்கெட் எண்கள் மற்றும் போடோக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
2.5 லட்சத்திற்கு அதிகமாக கிடைக்கும் பரிசு தொகை சிங்கப்பூருக்கே நேரடியாக வந்து பெற்று செல்லலாம் என கூறுகின்றனர். குறைவாக கிடைக்கும் பரிசுகளை, பரிசு பெற்றவருடைய ஈமெயில் அனுமதியுடன் பணத்தை பெற்று அனுப்பி வைக்கின்றனர்.
இதற்கென வாட்ஸ்ஆப் குழுக்கள் இயங்குவதாக கூறப்படுகிறது. வாங்கிய டிக்கெட் உடனே ஈமெயில் செய்யப்படுகிறது. அந்த ஈமெயில் நீங்கள் பரிசு விழும் தேதிக்கு சரிபார்த்து கொண்டு, பரிசு கிடைக்க பெற்றால் உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த மாதிரியான குழுக்கள் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இயங்குவதால், மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என இணைய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.