சிங்கப்பூரில் ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழாவில் பங்கேற்கிறார் கவிஞர் வைரமுத்து!

சிங்கப்பூரில் 'மகா கவிதை' நூல் அறிமுக விழாவில் பங்கேற்கிறார் கவிஞர் வைரமுத்து!
Photo: LISHA

 

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கவுள்ளார்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனி.. சிங்கப்பூரர்கள், PR-களுக்கு தனி.. சாங்கி ஏர்போர்ட் பயணிகள் அப்டேட்

சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வரும் மார்ச் 09- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ள ‘மகா கவிதை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்ளும் பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து, சிறப்புரையாற்றவிருக்கிறார்.

உலகளாவிய எழுமின் அமைப்பு, 8 Point Entertainment, 3 DOT Movies மற்றும் தமிழர் பேரவை, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஆகியவை இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

லாரி மோதியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி!

நூல் ஒன்றுக்கு 100 SGD அல்லது அதற்கு மேலும் வழங்குபவர்கள் மேடையில் கவிஞரிடம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு நூல் அறிமுகம் முடிந்த உடன் நூல் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ‘மகா கவிதை’ நூலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.