சிங்கப்பூரில் 10 சிறார்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இளைஞனுக்கு சீர்திருத்த பயிற்சி.!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இளம் சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களைப் புரிந்த 14 வயது இளைஞனுக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களைப் புரிந்த போது அந்த இளைஞனுக்கு வயது 14. தற்போது அந்த இளைஞனுக்கு 18 வயது.

சிங்கப்பூரை நாளைக்கு பாருங்க…நீல மின்னொளியில் ஜொலிக்க போகும் கட்டடங்கள் – இதுதான் விஷயம்மா..?

அப்போதில் இருந்து பிப்ரவரி 2020 வரை, அந்த குற்றவாளி மேலும் 9 சிறார்களைக் குறிவைத்தாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞனுக்கு குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி, அதாவது இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு தண்டனை நேற்று (மார்ச் 18) விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக குற்றவாளியின் பெயரைக் குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் அவர் புரிந்த பாலியல் தொடர்பிலான நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதுமட்டுமின்றி, மற்ற ஆறு சிறுமிகள் தொடர்பான மேலும் 29 குற்றச்சாட்டுகளும் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

‘சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளைக் காண அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்’- சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவிப்பு!