சிங்கப்பூரின் 56 வது தேசிய தினம் வருகின்ற 9ம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது, விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
தேசிய தின கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய தின அணிவகுப்பு மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.
56 வது தேசிய தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரின் பிராஸ் பசா, பூகிஸ் வட்டாரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 7 கட்டிடங்கள் சிவப்பு, வெள்ளை நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
“வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பது சவால்மிக்கது”
மேலும், தேசிய அருங்காட்சியகம், The Cathedral of the Good Shepherd, மத்திய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு வண்ண விளக்குகளால் ஒளிரிடப்பட்டுள்ளன.
இந்த மாதம் முழுவதும் இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு வரை அந்த இடங்கள் ஒளிரும், தேசிய தின உணர்வை நினைவூட்டும் வகையில், பல்வேறு இணைய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரின் சில பகுதிகளில் பட்டங்களைப் பறக்கவிடுவது, ஆளில்லா வானூர்திகளைச் இயங்குவது போன்ற வான்வழி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.