சிங்கப்பூரில் நேற்று (07/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சமூக அளவில் 700 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 5 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 10 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,70,588 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் VTL கீழ் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? அதிகாரப்பூர்வ தகவல்!
கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 827 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 146 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றன. அதேபோல், ஐ.சி.யூ. பிரிவில் 55 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 12 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஒரேநாளில் 884 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்!
கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏற்றம், இறக்கத்துடன் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.