“மன நிம்மதியும், மகிழ்ச்சியுடன் இருப்பது சிங்கப்பூரில் வாழக் கூடிய தமிழர்கள்; சிங்கப்பூர் தான் நம்பர் 1”- மதுரை முத்து வெளியிட்டுள்ள காணொளி!

"மன நிம்மதியும், மகிழ்ச்சியுடன் இருப்பது சிங்கப்பூரில் வாழக் கூடிய தமிழர்கள்; சிங்கப்பூர் தான் நம்பர் 1"- மதுரை முத்து வெளியிட்டுள்ள காணொளி!
Photo: Madurai Muthu/ Video/ Facebook

 

அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியில் புகழ்பெற்ற மதுரை முத்து சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது குறித்து சிங்கப்பூரில் இருந்தவாறே தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளியையும் பதிவேற்றம் செய்திருந்தார்.

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

அந்த காணொளியில் மதுரை முத்து தெரிவித்ததாவது, “நான் 96 நாடுகளுக்கு சென்றிருந்தால் கூட, எந்த நாடு அழகான நாடு? எந்த நாடு சுற்றிப் பார்ப்பதற்கு நல்ல நாடு? என்று கேட்பார்கள். தென்னாப்பிரிக்கா, உகாண்டா, கென்யா மற்றும் யாருமே செல்லாத நாடான பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். நம்ம தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடு சிங்கப்பூர் தான்.

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக உள்ளது. சிங்கப்பூரின் ரூபாய் நோட்டிலும் தமிழ் மொழி இருக்கிறது. உலக நாடுகளிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது சிங்கப்பூர். சிங்கப்பூரில் தான் தமிழர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டாலும், போகலாம், வரலாம். நள்ளிரவில் கூட பெண்கள் நகைகளை அணிந்துக் கொண்டு தனியாக நடந்துச் செல்வது கூட சிங்கப்பூரில் முடியும். எந்த ஊரிலும் வந்து சுற்றிப் பார்க்கலாம்; ஜாலியாக இருக்கலாம்; ஆனால் மன நிம்மதியும், மகிழ்ச்சியுடன் இருப்பது சிங்கப்பூரில் வாழக் கூடிய தமிழர்கள், இளைஞர்கள்; சிங்கப்பூர் தான் நம்பர் 1” என்று குறிப்பிட்டுள்ளார் .

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: தொடக்கமே நல்ல சம்பளம்.. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவிந்த விண்ணப்பம்

இந்த காணொளியை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.