சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி, சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (15/07/2022) நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் சீன வீராங்கனை ஹான் யூவை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற முதல் சுற்றில் 17- 21 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனையை வீழ்த்தினார் சீன வீராங்கனை ஹான் யூ.
அதைத் தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து, இரண்டாவது செட்டில் 21-11 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். அதேபோல், மூன்றாவது சுற்றிலும் பி.வி.சிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த 21-19 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
சிங்கப்பூரில் அனைவருக்கும் இலவசம்… அருமை திட்டம்; இது கண்டிப்பா உதவும்!
ஒட்டுமொத்தமாக, 17-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்திய பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.