சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு குவிய தொடங்கும் இந்த சூழலில், சிங்கப்பூர் அதன் சேவைத் துறையை சமாளிக்க வெளிநாட்டு ஊழியர்களை பெரிய அளவில் வேலைக்கு எடுக்க திட்டம் தீட்டியுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் ஒன்பது வேலைகளில் ஒன்றில் பணியாற்றுவதற்கான வேலை அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு பணிப்பெண்ணின் மோசமான செயல்.. அதிர்ச்சியில் நிலைகுலைந்த முதலாளி மகள்
இதற்கு முன் அந்த வேலைகளுக்காக மலேசியா, சீனா, ஹாங்காங், மக்காவோ, தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே சிங்கப்பூர் work permits அனுமதியை வழங்கியது.
ஹோட்டல் (Hotel housekeepers) மற்றும் சுமைதூக்கும் ஊழியர்கள் (porters) அந்த அனுமதி பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதே போல இந்த பட்டியலில் இந்திய உணவக சமையல் ஊழியர்கள் (Indian restaurant cooks) மற்றும் உலோக வேலையாட்களும் (metal workers) சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து ஊழியர்களைத் கொண்டுவருவதன் மூலம் ஊழியர் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்த கப்பலில் தீ.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி