சிங்கப்பூரில் பொதுமக்களுக்காக வேண்டி பொதுநலனுடன் சேவையாற்றிய 6 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு, உலு பாண்டன் பார்க் கனெக்டரில் பெண்ணுக்கு பானபங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்துகொண்ட ஆடவரை பிடிக்க உதவிய ஊழியர் திரு வினோத் ராஜேந்திரன் மற்றும் திருமதி ரமிசா பானு அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
“நிர்வாண வீடியோக்களை ஆன்லைனில் போட்டுவிடுவேன்” பெண்ணுக்கு மிரட்டல் – ஆடவருக்கு சிறை
அதே போல, VivoCity இல் உள்ள கடையில் திருட்டை கண்டுபிடிக்க உதவிய, திரு முகமது சுபான் மற்றும் காமன்வெல்த் அவென்யூ பகுதியில் திருட்டை கண்டுபிடிக்க உதவிய திரு. அழகர் ரவிக்கும் விருது வழங்கப்பட்டது.
இவர்களோடு சேர்த்து மொத்தம் 6 பேருக்கு விருது வழங்கி சிறப்பித்தது சிங்கப்பூர் காவல்துறை.
“மலக்குல் மௌத்” Tiktok கொடூர சவாலில் ஈடுபட்டு உயிரை விட்ட இந்தோனேசிய ஆடவர்