யாருக்கெல்லாம் பாதிப்பு? சிங்கப்பூரில் அமலுக்கு வந்த புதிய சட்டம்!

Zhangxin and Singapore Pools

வீடு­களில் நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரு­டன் விளை­யாடும் சூதாட்­டங்­கள் தொடர்­பிலான புதிய சட்­டங்­கள் நடப்­புக்கு வந்துள்ளது.

அத்­த­கைய சூதாட்­டங்­கள் இப்­போது சட்­ட­வி­ரோ­த­மா­னவை அல்ல. இருந்­தாலும் அவை பற்றி இப்­போ­தைய சட்­டங்­களில் தெள்­ளத்­தெ­ளி­வான வரை­மு­றை­கள் இல்லை.

எவை எவை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்­ப­தற்­கான நெறி­மு­றை­கள் புதிய சட்­டங்­களில் இடம்­பெற்று உள்ளன.

சூதாட்டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டம் என்ற புதிய சட்­டத்­தின்­ கீழ் இதர பல மாற்­றங்­களும் அமலாகும். 21 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் சூதா­டு­வது குற்­றம் என்று புதிய சட்­டம் தெரி­விக்­கிறது.

புதி­தாக அமை­ய­வி­ருக்­கும் சூதாட்ட ஒழுங்­கு­முறை ஆணை­யம், இப்­போ­தைய ‘சூதாட்டக்கூட ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின்’ பணி­களைத் தன்­வ­சம் எடுத்­துக்­கொள்­ளும்.

அத்துடன், சிங்­கப்­பூ­ரில் எல்லா வகையான சூதாட்­டங்­க­ளை­யும் ஒழுங்குபடுத்­து­வ­தற்கு ஏது­வாக புதிய ஆணை­யத்­துக்கு மேலும் பல அதி­காரங்கள் இருக்­கும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, தேசிய சூதாட்ட பிரச்­சினைத் தீர்வு மன்றம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து செயல்­பட்டு சூதாட்­டத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய சமூக பாதிப்­பு­களை ஆணை­யம் குறைக்கும்.

அதே­வே­ளை­யில், காவல்­துறை தொடர்ந்து அம­லாக்க நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும். இந்த நடவ­டிக்­கை­கள் கார­ண­மாக சூதாட்­டப் போக்­கு­களும் தொழில்­நுட்­பப் போக்­கு­களும் எப்­ப­டி­யெல்லாம் தலை­தூக்­கு­கின்­றன என்­பதை அர­சு நன்கு தெரிந்­து­கொள்ளும்.

சூதாட்டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ், குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் நேரடி­யா­கச் சமூக சூதாட்­டங்­களில் ஈடு­ப­டு­வது சட்­ட­வி­ரோ­த­மான செயல் அல்ல. அதற்கு வயது வரம்­பும் இல்லை.

ஆனால், அத்­த­கைய சூதாட்­டங்­கள் ஒரு­வ­ரின் வீட்­டில் நடக்­க­வேண்­டும். எந்­த­வொரு தொழி­லா­க­வும் அதை நடத்த முடி­யாது. இருந்­தா­லும் இணை­யம் மூலமான சமூக சூதாட்­டங்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

குறிப்­பிட்ட வயதை எட்­டா­த­வர்­கள் சூதா­டு­வது அல்­லது சூதாட்ட இடங்­களுக்­குச் செல்­வது ஒரு குற்­ற­மா­கும்.