பெய்ஜிங் சென்றடைந்தார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: President Of Singapore Official Facebook Page

சீன அதிபர் ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 24- வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் (Olympic Winter Games) தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (03/02/2022) மாலை சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங் (Beijing) சென்றடைந்தார். இந்த தகவலை சிங்கப்பூர் அதிபர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு இண்டிகோ விமானம் வழங்கும் சிறப்பு சலுகை

பிப்ரவரி 6- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், சீன அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கும் வரவேற்பு விருந்திலும் சிங்கப்பூர் அதிபர் கலந்துக் கொள்கிறார்.

சிங்கப்பூர் அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (Minister Of Foreign Affairs), கலாசாரம், சமூகம், இளைஞர் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் லோ யென் லிங் (Minister of State Culture, Community and Youth, Trade and Industry Low Yen Ling), அதிபரின் அலுவலகத்தின் உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் பெய்ஜிங் சென்றுள்ளனர்.

இவ்வளோ நேர்த்தியா ஒரு நாட்டை கட்டமைக்க முடியுமா? சிங்கப்பூர் இப்படியொரு திட்டம் இருப்பதே பலருக்கும் தெரியாது!

சிங்கப்பூர் அதிபரின் சீன சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.