சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம்!
Photo: Tharman Shanmugaratnam/Facebook

 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பே தேர்தலை நடத்தி சிங்கப்பூர் அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப், கடந்த மே மாதம் 29- ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார்.

முட்டைகள் மீது ரெஸ்ட் எடுக்கும் பெருச்சாளி – கேள்வி குறியாகும் பாதுகாப்பு… SFA தலையீடு

இந்த நிலையில், சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், மக்கள் செயல் கட்சியின் மூத்த தலைவருமான தர்மன் சண்முகரத்தினம் (வயது 66), பிரதமர் லீ சியன் லூங்- க்கு இன்று (ஜூன் 08) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதன் காரணமாக, தங்கள் தலைமையிலான சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்தும், மக்கள் செயல் கட்சிப் பதவியில் இருந்தும், அனைத்து அரசு சார்ந்த பொறுப்புகளில் இருந்தும் வரும் ஜூலை 07- ஆம் தேதி முதல் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடிகள் அதிர்ச்சி தோல்வி!

பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், “தர்மன் சண்முகரத்தினத்தின் பதவி விலகல் அமைச்சரவைக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.