இந்த 2022 புத்தாண்டில், வழக்கத்தை விட சிங்கப்பூர் குளிர்ச்சியாக இருக்கும், ஆகையால் சிங்கப்பூரில் வெப்பநிலை சட்டென்று குறையத் தொடங்கும்.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மழை மற்றும் குளிர்ச்சியாக வானிலையை குடிமக்கள் எதிர்பார்க்கலாம் என தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்றும், மேலும் வரும் வார இறுதியிலும் பருவமழை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆண்டுக்கு இரண்டு முதல் நான்கு பருவமழை அதிகரிப்புகள் ஏற்படும்.
சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!