COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்தவர் மரணம் – மொத்தம் 25ஆக உயர்வு..!

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதில் சம்பவம் 11714 என அடையாளம் காணப்பட்ட, 41 வயதான சீன நாட்டை சேர்ந்த ஆடவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் கட்டண விவரம்..!

இவருக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் தொற்றுநோயிலிருந்து குணமடைந்து கடந்த மே 17 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று MOH தெரிவித்துள்ளது.

அதாவது குணமைடைந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவரின் மரணத்திற்கு காரணம், மோசமான pulmonary thromboembolism பிரச்சனை ஏற்பட்டதே என்று சான்றளித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தவர்களில் வயது குறைந்தவர் இவர்.

இதனுடன் COVID-19 காரணமாக சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தேசிய தினத்தை முன்னிட்டு 12 பொருள்கள் அடங்கிய அன்பளிப்பு பை..!