JUSTIN: சிங்கப்பூரில் Omicron தொடர்பான முதல் மரணம் பதிவு

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 22) ஓமிக்ரான் தொடர்பான முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதில் 92 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் மற்றும் அவருக்கு உடல்நல குறைபாடுகள் ஏதும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

JUST IN: அப்பர் புக்கிட் திமா விளையாட்டு மைதானத்தில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு

அவரின் குடும்ப உறுப்பினரிடமிருந்து கிருமி பரவியதாகவும், சுமார் 10 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் ஜனவரி 20 அன்று அவர் இறந்ததாகவும் MOH கூறியுள்ளது.

இது பற்றிய விசாரணையில், ஓமிக்ரான் கோவிட்-19 தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த கும்பல் (வீடியோ): 4 வெளிநாட்டவர் உட்பட 6 பேருக்கு கொள்ளையில் தொடர்பு