சிங்கப்பூர் Blk 103B Canberra தெருவில் கலவரம் செய்ததாக 18 முதல் 48 வரை வயதுடைய 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த 12 பேரைத் தவிர, இரண்டு ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குறிப்பிட்ட நாட்டிற்கு அக்டோபர் 25 முதல் கூடுதல் விமானங்கள் – ஏர் இந்தியா..!
அந்த இரண்டு பேரும் Khoo Teck Puat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் Blk 103B Canberra தெருவில் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடத்த இடத்திற்கு 3:30 மணியளவில் காவல்துறை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் Blk 103B Canberra தெருவில் கலவரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) நேற்றிரவு Blk 103B Canberra தெருவில் அதிகாலை 3:20 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததை உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் விரைவு சோதனை முறை..!