சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி துறைகளில், விரைவில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடைமுறை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்த தேவையான ஒரு முத்தரப்புக் குழுவை அமைப்பது குறித்து மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!
கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி துறைகளில் இந்த படிப்படியான சம்பள உயர்வு முறை எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது என்று NTUC துணை தலைமை செயலாளர் ஸைனல் சப்பாரி தெரிவித்துள்ளார்.
அவற்றை நடைமுறைப்படுத்த சிறுது காலம் எடுக்கலாம் என்றும் மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியமாக S$1,300 வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி கட்சி கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது, இந்த சம்பள உயர்வு முறையில் 80,000 துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள் என 30% ஊதிய உயர்வு பெற்றுள்ளனர் என்று அரசாங்கம் குறிப்பிட்டது.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!