தமிழ்நாடு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பகுதியை சேர்ந்த 21 வயதுமிக்க இளம் பெண் அந்த பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் நரியன்குளத்தைச் சேர்ந்த ஊழியருக்கு, அந்த கல்லூரி மாணவிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 30 அன்று கடிதம் எழுதி வைத்திவிட்டு, தனது வீட்டில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மரண வாக்குமூலமாக பார்க்கப்படும் அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்தது; “நான் குளிப்பதை ஆடவர் ஒருவர் காணொளி எடுத்து மிரட்டினார், அவனிடம் இருந்து தப்பிக்க வேற வழி எனக்கு தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு அம்மா. ”
“எனக்கு அதிகநாள் வாழ ஆசைதான். ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடல” என எழுதியிருந்தார் என தமிழ் ஊடகங்கள் கூறியுள்ளன.
இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.