தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 45 வயதான சுரேஷ் சிங்கப்பூரில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது, அந்த கனவை நிறைவேற்றிய சுரேஷ் தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். அதற்காக வேண்டி தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் அவர்.
“யாருங்க இவரு.. பரபரப்பான ரோட்டுல இப்படி பன்றாரு” கடுப்பான நெட்டிசன்கள்! (வீடியோ)
புதிய வீடு கட்டும் பணி நடைபெறுவதால், தற்போது அவர்கள் வசித்து வந்த வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டு மாடியில் குடும்பத்துடன் அவர்கள் தூக்கியுள்ளனர்.
அப்போது, இரவு நேரத்தில் மர்மநபர்கள் நுழைந்து, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் அந்த கும்பல்.
மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில், சுமார் 45 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து பீரோல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தன்னுடைய நகை, பணம் காணாமல் போனதை அறிந்த அவர், இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்
பின்னர் அந்த பகுதிக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மேலும் கைரேகை நிபுணர்களும் வீட்டுக்கு வந்து கை ரேகையை பதிவு செய்தனர்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த நகை மற்றும் பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.