சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழக ஊழியர் – குடும்பத்துடன் செல்லும்போது கொடூர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான சோகம்

Singapore Tamilnadu worker death in hometown

சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய கொஞ்ச நாளிலேயே ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஊழியர் சரவணன். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

“சிங்கப்பூருள்ள ஒரு ஆள் வாங்கிப்பாரு… எனக்கு கமிஷன் கெடைக்கும்” – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய ஆடவர்: போலீசார் விசாரணை

இவர் தன் மனைவி, இரு மகன்களுடன் பக்கத்துக்கு ஊரு திருமணத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது சித்தூர் பாலம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக்கில் நேருக்கு நேர் மோதி கடும் விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மனைவி, மகன்கள் பலத்த காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து திரும்பிய சிறுது நாளிலேயே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உட்லண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்த ஆடவர் கைது