சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை

தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த 45 வயதான விவசாயி அன்பழகனுக்கு, 40 வயதான சரிதா என்ற மனைவியும், மேலும் தென்னரசு, பூவரசு, இளவரசு என்ற 3 மகன்களும் உள்ளனா்.

நூலிழையில் தப்பித்த மூவர் (வீடியோ): ரெட் லைட்டை மதிக்காமல் சென்ற பேருந்து – ஓட்டுனருக்கு எதிராக கடும் நடவடிக்கை

இதில் இரண்டு மகன்களான தென்னரசு மற்றும் பூவரசு ஆகியோா் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனா்.

அது ஒருபுறம் இருக்க, கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடுகளும் நீடித்து வந்துள்ளது. இதனால் அன்பழகன் தனியாக வீடுகட்டி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டருகே உள்ள மாந்தோப்பில் புதன்கிழமை காலை அன்பழகன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அன்பழகன் உறவினர் அளித்த புகாரின்பேரில் மனைவி சரிதா, இளைய மகன் இளவரசு உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை தொடர்கிறது.

“முழு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்” என்ற நிலையை தக்க வைக்க இது கட்டாயம்!