போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!

File Image

சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வந்தவர் தங்கராஜு சுப்பையா (வயது 46). கடந்த 2013- ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 1,017.9 கிராம் போதைப்பொருளைக் கடத்த ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டதாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் மீது சிங்கப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணையை நடத்தியது.

சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த பாதசாரி ஆடவர்

அதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமான நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கராஜூ சுப்பையாவை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

தீர்ப்பு எதிராக தங்கராஜு சுப்பையாவின் குடும்பத்தினர் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், மனுவை ஏற்காத நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையாவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார். இதனால் குறைந்தபட்ச தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த நிலையில், சிங்கப்பூர் சிறைத்துறை தங்கராஜு சுப்பையாவின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்கராஜு சுப்பையாவின் மரணதண்டனை ஏப்ரல் 26- ஆம் தேதி சாங்கி சிறையில் நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் சிறைத்துறை உறுதி செய்து, ஏப்ரல் 19- ஆம் தேதி புதன்கிழமை அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருந்தது.

சாங்கி நகரின் கிழக்கில் உள்ள சிறைச்சாலையில் இன்று (ஏப்.26) அதிகாலை தங்கராஜு சுப்பையாவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு, அவரது உறவினர்கள் சிறைச்சாலை முன்பு கண்ணீருடன் திரண்டிருந்தனர்.

ஆறு மாத இடைவெளிக்கு பிறகு சிங்கப்பூர் அதிகாரிகளால் நிறைவேற்றப்படும் முதல் மரணத் தண்டனை இதுவாகும். கடந்த 2022- ஆம் ஆண்டு மட்டும் சிறைத்துறை அதிகாரிகள் 11 மரணத் தண்டனைகளை நிறைவேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Causeway Link’ பேருந்து நிறுத்துமிடம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என அறிவிப்பு!

சிங்கப்பூரின் சட்டப்படி, போதைப்பொருள் கடத்தலுக்கு மரணத் தண்டனையும், அதனை விநியோகம் செய்யும் நபர்களுக்கு குறைந்த தண்டனையும் விதிக்கப்படும் என்பது நினைவுக்கூறத்தக்கது.