சிங்கப்பூரில் இருந்து வந்த நபரிடம் ரூபாய் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Video Crop Image

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலியான S$10,000 நோட்டை விற்க முயன்ற ஆடவர் – விசாரித்து வரும் போலீஸ்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ‘அயன்’ திரைப்படப் பாணியில் பெட்டிக்குள் அடைத்து போதைப்பொருள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

‘பங்குனி உத்திர திருவிழா 2024’- பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம்!

ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்திறங்கிய இந்தோனேசியாவைச் சேர்ந்த நபரின் சூட் கேஸை திறந்து சோதனை நடத்திய போது, அதில் கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்டப் பயணியை கைது செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.