சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற இருவருக்கு செக்.. தீவிர விசாரணை

NParks investigating alleged smuggling singapore to tamilnadu
Photo: Coimbatore Airport Official Twitter Page

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற இருவர் தங்கம் கடத்தி சென்றதாக பிடிபட்டனர்.

395 கிராம் எடைகொண்ட தங்க சங்கிலிகளை பெட்டியில் மறைத்து சென்ற இருவரில் ஒருவர் சோதனையின்போது பிடிபட்டார்.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், இன்னொருவர் உள்ளாடையில் வைத்து சுமார் 359 கிராம் தங்கத்தை கடத்தியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, கடத்தி வரப்பட்ட தங்கம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.45.31 லட்சம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வளவு தங்கம் எப்படி கொண்டுவரப்பட்டது, இதன் பின்னணியில் யாரும் உள்ளார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் 1,200 வெளிநாட்டினருக்கு PR – Permanent Residence அந்தஸ்து…